தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - மகாகவி சுப்பிரமணிய பாரதி
Share |

Sunday, March 8, 2009

வலையில் படித்து ரசித்த ஹைகூ கவிதைகள்

***************************
சூறைக் காற்றில் அலையும் கிளையின்
நுனியைத் துரத்தும்
பட்டாம் பூச்சி

******************************
ரேடியோ பாட்டு. . .
தலையாட்டும் தாத்தா. . .
நின்று விடுமோ . . . .?

*****************************

பழனி படிக்கட்டு சடை தாடி சாமியார்
காசு வேண்டி விரித்த பேப்பரில்
சவர பிளேடு விளம்பரம் !

*********************************************

காற்றில் அசையும்
நெற்கதிர் உச்சியில்
பயத்துடன்
கம்பளிப் பூச்சி !

************************

சர்க்கஸ் வலையின் ஆட்ட்த்தில்
கீழே விழுந்தது
சிலந்தி !

************************

சலனமின்றி ஓடும் நதி

கூட ஓட முடியாத

மரத்தின் நிழல்

************************

வெறும் நட்பென்று விலகியே இருந்த

தண்டவாளங்கள் சங்கமித்தன

காதலில் தொடுவானத்தில்

************************


விஷம் வாங்கியதில்

சில்லறைக்குப் பதில்

கிடைத்தது இரண்டு சாக்லேட்

************************

எழுத்துக்கள்

பிரசுரிக்கப் படுவதில்லை!

பிரசவிக்கப் படுகின்றன!

************************

படைப்பை

அனுப்பிவிட்டுக்

காத்திருந்தான்!

பேறுக்கால சுகம்!

************************

சூல் கொண்ட

கருப்பை!

புதிய கதைக்கான

கரு!


************************

வளை காப்பு!

படைப்பைப் படித்த

நண்பனின் பாராட்டு!

************************

வானக் காதலனுக்காய்
மழைக்காதலி எழுதிய கவிதை
வானவில்.

************************

தன்னிறைவு பெற்றவர்கள்
மின் உற்பத்தியில்,
மின்மினிப் பூச்சிகள்.

************************

உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.

************************

பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.

************************

புகைந்து அழியும் போதும்
அஸ்திவாரமிட்டுச் செல்கிறது அழிவிற்கு,
சிகரெட்.

************************

உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி

************************

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி..மீண்டும் வருக